இயக்குனர்: வசந்தபாலன்
உன் பேரை சொல்லும் போதே
பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: G .V . பிரகாஷ் குமார்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்.. ஓ ஓ
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என்னாவேன்.. ஓ ஒ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என்னாவேன்.. ஓ ஒ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெக்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என்னாவேன்.. ஓ ஒ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
ஒ ..நீ பார்க்கும் போதே மழை ஆவேன்.. ஓ ஓ
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
உன் கருங்கூந்தல் குழலாக தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடி தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை, பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என்னாவேன்.. ஓ ஒ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்.. ஓ ஓ
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என்னாவேன்.. ஓ ஒ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
_________________________________________________________________
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
பாடகர்கள்: வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒற்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் - வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் - தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் - நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் - மீழவில்லை
அவள் கை விரல் மோதிரம் - தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பட்டு புடவை என்றும் - அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் - சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா - வாசமில்லை
அவளில்லாமல் - சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் - எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி - எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவும் இல்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
____________________________________________________________________
கதைகளை பேசும் விழி அருகே
பாடகர்கள்: பென்னி டாயல், ஹம்சிகா
இசையமைப்பாளர்: G .V . பிரகாஷ் குமார்
கதைகளை பேசும் விழியருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ.. கதைகளை பேசும் விழியருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஹோ.. என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
ஒ..கதைகளை பேசும் விழியருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீ அல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சக்கரை தடவிய நொடி அல்லவா
கல்லும் மண்ணும் ஓ.. வீடுகள் இல்லை..
ஓ அன்பின் வீடே ஓ.. அழிவது இல்லை..
வெறும் தரையில் படுத்து கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா..
உன் மடியும் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவையில்லையடி..
ஹோ.. கதைகளை பேசும் விழியருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
உன்னக்குள் தொடங்கி உன்னக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திட தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ.. குழந்தைகள் ஆவோம்..
ஓ இருட்டின் நதியில் ஓ.. இறங்கி போவோம்..
நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றேனும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டும்..ஹே
ஓ.. கதைகளை பேசும் விழியருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஹோ.. என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ..இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
____________________________________________________________________
கண்ணில் தெரியும் வானம்
பாடகர்: G .V .பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: G .V .பிரகாஷ் குமார்
கண்ணில் தெரியும் வானம்
கையில் வராதா
ஓ.. ஓ..
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிக கொடுமை.. இளமையில் வறுமை..
பசி தான் மிக பெரு மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா..
இது மாறுமா.. ஓ..ஓ
எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கே உண்டு
மனிதன் மட்டும் தேடி பார்த்தும்
எங்கும் இல்லை ..
கண்ணும் காதும், கையும் காலும்
இல்லா மனிதன் உண்டு
வாயும் வயிறும், இல்லா மனிதன்
எங்கும் இல்லை...
மனிதன் எங்கும், கண்ணின் விதை
அள்ளி தூவ.. கை வேண்டும்..
வருங்காலத்தில் வறுமை இல்லா..
உலகம் வேண்டும்.. ஓ ..
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிக கொடுமை.. இளமையில் வறுமை..
பசி தான் மிக பெரு மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா..
இது மாறுமா.. ஓ .. ஓ
___________________________________________________________________
எங்கே போவேனோ
பாடகர்கள்: பென்னி டாயல், MK பாலாஜி, ஜானகி ஐயர்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என் இதையத்தை வாங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என் கண்ணை கீறிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே
ஒரு துண்டு வானம், நீதானடி..
எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இரை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விதி
பந்தாடுதே, என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாதித்தே தீருமோ ஜென்மம்
கொலை போல தானா, பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்..
....நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா, இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா, இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே ..
....நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே
ஒரு துண்டு வானம், நீதானடி..
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
No comments:
Post a Comment