வருத்தப்படாத வாலிபர் சங்கம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன்,சத்யராஜ், ஸ்ரீ திவ்யா
இயக்குனர்: பொன்ராம்
இசையமைப்பாளர்: D . இமான் 

இந்த பொண்ணுங்களே 
பாடியவர்: ஜெயமூர்த்தி 

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி.. பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்கடா 
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்கடா 

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா

கார்டு வாங்கி கொடுக்குறோம்.. கவிதை எழுதி கொடுக்குறோம்
செல்லு வாங்கி கொடுக்குறோம்.. ரிசார்ஜும் பண்ணி கொடுக்குறோம் 
அன்ப கூட வாரி வாரி கொடுக்குறோம் 
அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கி கொடுக்குறோம் 
நாம கொடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்கதான் 
நமக்கு வேதனைய கொடுக்குறாங்க என்னடா 
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா..சொல்லுடா 

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா

வீடு வாசல் மறக்குறோம்.. வெட்கம் ரோசம் மறக்குறோம் 
நல்லா தூங்க மறக்குறோம்.. நண்பனையும் மறக்குறோம் 
நாளு கிழமை கூட நாம மறக்குறோம் 
அவங்க நெனப்புல  தான் எல்லாத்தையும் மறக்குறோம் 
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்கதான் 
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்னடா 
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா..சொல்லுடா 

பொண்ணுங்களே.. இந்த பொண்ணுங்களே..
ஹே பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கலருனு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி.. பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்கடா 
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்கடா 

இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்கடா 
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்கடா

_______________________________________________________________

ஊதா கலரு 
பாடியவர்: ஹரிஹரசுதன் 

ஊதா..ஊதா..
ஊதா கலரு ரிப்பன் .உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்..ஓ 

ரோஜா.. ரோஜா..
ரோஜா கலரு பொம்மி..உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி..உனக்கு யாரு மம்மி 
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்

ஊதா... ஊதா

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி 
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி 
மத்தவங்க சிரிப்ப பார்த்தா ஒகே வெறும் ஒகே 
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்திடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல bபோரு bபோரு 
சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் bபீரு bபீரு 
கிங்கு பிஷ்ஷேர் bபீரு 

ஊதா... ஊதா

மத்தவங்க உரசி போனா ஜாலி செம்ம ஜாலி
நீ உரசி போன பிறகு பாத்தா காலி அயம் காலி 
மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி
நீ கடந்து போன பிறகு குளிரு ஏசி விண்டோ ஏசி 
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்டை சேட்டை 
என்னோடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை 
நிப்பாட்டுறேன் பாட்ட..

ஊதா... ஊதா 
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்.. ஓ 

ஊதா... ஊதா 
ஊதா ஆ ...
_______________________________________________________________

யென்னடா யென்னடா..
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ்,
                             ஸ்வேதா சுரேஷ் (விசில்)

யென்னடா யென்னடா.. யென்னடா யென்னடா

யென்னடா யென்னடா.. உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே.. தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா 

யென்னடா யென்னடா.. உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே.. தன்னாலே என்னவோ ஆச்சு

நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்
பொட்டு செடி நான் மொட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு விளங்காம போகுறேனே 
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒறங்காம யேங்குறனே
உன்னோட பேசிடவே உள்ளூர ஆச கூடி போச்சு
கண்ணாடி பாத்திரமா என்னோட தேகம் மாறியே போச்சு..போச்சு

யென்னடா யென்னடா.. உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே.. 

ஓ.. நீ லேசாக பார்த்தாலும் லூசாகி போறேன்
பச்ச நெருப்பா பத்திக்கிடுறேன் 
விளையாட்டு பொம்மைய போல உடைஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டி போட்டு கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போவேன் 
பூச பண்ணுறேன்..என்ன சொல்ல...

யென்னடா.. 
ஓ.யென்னடா 

ஓ..யென்னடா யென்னடா.. உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே.. தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா 

யென்னடா  யென்னடா.. 
யென்னடா  யென்னடா 
____________________________________________________________________

பாக்காத பாக்காத 
பாடியவர்கள்: A . V . பூஜா , விஜய் யேசுதாஸ்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன்.. பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்.. நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன்.. பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்.. நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத

ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போலே எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும் படி தான்
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என்கிட்டனு 
என்னை முழுங்க நீ பாக்குற 
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா 
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ 
கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே
கூரை பட்டு எப்போ  வாங்குவ 
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் 

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன்.. பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்.. நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்


பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத
______________________________________________________________________


வருத்தப்படாத வாலிபர் சங்கம்
பாடியவர்கள்: சிவகார்த்திகேயன்,அந்தோணி தாசன்,கோவில்பட்டி அமளி

சில்லாவோ திண்டுகல்லு...சின்னாலம் பட்டி பக்கம் சொல்லு..
நம்ம சிலுக்குவார் பட்டி  சிங்கம்..செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
அண்ணே அன்புக்கு அன்னை தெரசா.. அறிவுக்கு அப்துல் கலாம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா..
நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐநூற
அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
நம்ம அல்லி நகரத்து அடிய
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா

ஊர காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல.. இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள... 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

நீதி நேர்மை காக்கின்ற சங்கம் 
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல.. இது இல்ல
இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சறுக்கிருவோம்  
ஹே ஊரு நடுவால பான்னேர் வச்சி
பட்டைய கிளப்பிருவோம்
போற..வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம் 

கண்ட யெடத்துல பந்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டைய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்
நாங்க..

அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவிதை சொல்லுவோம்
எனஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க..
செம்ம வாலு.. செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்.. 
இங்காரு..
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்.. 
கொன்றுவேன் பாத்துக்க

மோதும் புலியாக லந்தடிப்போம் 
மொறச்சா பயந்திருவோம்
அப்புறம்..
நேரம் தெரியாம தூங்கிருவோம்

மோதும் புலியாக லந்தடிப்போம்
மொறச்சா பயந்திருவோம்
ஹே.. நேரம் தெரியாம தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்

வெயிலடிக்குது மழையடிக்குது
அலையடிக்குது புயலடிக்குது
பர பரக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது 
ஏங்க?

கொடி பறக்குது வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது 
பறை அடிக்குது தவில் அடிக்குது 
மனசுக்குள்ளார மணி அடிக்குது 
நாங்க..
செம்ம வாலு.. செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு 
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு 
வருத்தப்படாத வாலிபர் சங்கம்.. 
அடியே காந்தா..
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் 


இனிமே எல்லாம் அப்டித்தான் .. 




No comments:

Post a Comment