பையா

நடிகர்கள்: கார்த்தி,தமன்னா
இயக்குனர்: லிங்குசாமி 
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

என் காதல் சொல்ல
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, தான்வி 

என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி...

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகமில்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி..

உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழைக்காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலை பாயும் மெல்ல குடை சாயும் ஹே-ஹு ஹே ஹே 

என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி...

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடியேருமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி..

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும் 
அடி இது ஏதோ ஒரு புது யேக்கம் 
இது வலித்தாலும் நெஞ்சம் அதையேற்கும்  ம்ம்ம்  ஹோய் 

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
இந்த நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே 
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே..

என் அதிகாலை  என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் யெழ வேண்டும் 
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் -ஹே-ஹு ஹே  

என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி...

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகமில்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி..
______________________________________________________________________

அடடா மழைடா

பாடகர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி 

தந்தானே தந்தா நா னே 
தந்தா நா னே தந்தா நா னே 
தந்தானே தந்தா நா னே
தந்தா நா னே நா .
தந்தானே தந்தா நா னே 
தந்தா நா னே தந்தா நா னே 
தந்தானே தந்தா நா னே
தந்தா நா னே நா-ஆ 

அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா 
அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா 
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை புடிக்க
கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு..

மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா 

நன நன்னன் நனா! நன நன்னன் நனா!
நன நன்னன் நன னா- நன நன னா!
நன நன்னன் நனா! நன நன்னன் நனா!
நன னா னா னா ந ன ந ன ந னா !

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு
சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலையே உனக்குள்ள
தேடி பாரு..
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தல 
மத்தியில் சுத்துது கிறுக்கு..
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே..

உன்னை போல வேறாரும் இல்ல 
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்னை அனுப்பி வச்சான்
இந்த கண்ணு போதலையே 
எதுக்கிவள படைச்சு வச்சான் 
பட்டாம் பூச்சி பொண்ணு
நெஞ்சு பட படக்கும் நின்னு 
பூவும் இவளும் ஒன்னு
என்னை கொன்னு புட்டா கொன்னு 
போவது எங்கே நான் போவது எங்கே 
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா அடை மழைடா 
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அடை மழைடா 
அழகா சிரிச்சா அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை 
கூட சூடாச்சு..
குடையை நீட்டி யாரும்
இந்த மழைய தடுக்க வேண்டாம் 
மழைய போட்டு யாரும் 
என் மனச அடக்க வேண்டாம்கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு
____________________________________________________________________


துளி, துளி, துளி மழை 

பாடகர்கள்: ஹரிச்சரன், தான்வி 

துளி துளி துளி மழையாய் வந்தாளே..ஏ ஏ ஏ
சுட சுட சுட மறைந்தே போனாளே..ஏ ஏ ஏ 
பார்த்தால் பார்க்க தோன்றும் 
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் போது காற்றாய்
பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா..
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா..
அழகாய் மனதை பறித்து விட்டாளே..

துளி துளி துளி மழையாய் வந்தாளே..ஏ ஏ ஏ
சுட சுட சுட மறைந்தே போனாளே..ஏ ஏ ஏ 

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ...
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ..
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது
நெஞ்சுக்குள்ளே  மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்..
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும் 
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்..
அழகாய் மனதை பறித்து விட்டாளே..

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா..
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா..

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் 
நெஞ்சிலே தாங்குவேன்..
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்..
மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும் போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்..
அழகாய் மனதை பறித்து விட்டாளே..

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா..
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா..

துளி துளி துளி மழையாய் வந்தாளே..ஏ ஏ ஏ
சுட சுட சுட மறைந்தே போனாளே..ஏ ஏ ஏ 
துளி துளி துளி மழையாய் வந்தாளே..ஏ ஏ ஏ
சுட சுட சுட மறைந்தே போனாளே..ஏ ஏ ஏ
_______________________________________________________________________

பூங்காற்றே பூங்காற்றே 

பாடகர்: பென்னி டாயல்

பூங்காற்றே பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு வீசும்.. இந்த பொண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும்.. பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம், கொஞ்சம் மேகம் 
கொஞ்சி பேசும் காற்று தொட்டு செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தை பேசாமல்
தோற்க்கின்றேன் தோற்க்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித் தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதி பார்த்தால் அதன் பெயரினை கேட்க 
மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி 
போகின்றேன் போகின்றேன் 
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக
அனைகின்றேன்.. எரிகின்றேன் 
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்.. போகும் தூரம் குறைகிறதே 

என் நெஞ்சோடு வீசும்.. இந்த பொண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும்.. பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
___________________________________________________________________

சுத்துதே சுத்துதே பூமி 

பாடகர்கள்: கார்த்திக், சுனிதா சாரதி

சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி

ஹே..சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே 
எதனாலே இந்த மாற்றம் 
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிறாய் 
சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ 
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக் கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி

இதயம் உருகி தான் கரைந்து போவதை பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்...
இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் 
உனை கேட்கிறேன்...
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர்  இரவு..
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா

ஹே..சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி 
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி
நிலவு பார்த்து ரசிக்கும்..
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்..
_______________________________________________________________________

ஏதோ ஒன்று என்னை 

பாடகர்: யுவன் சங்கர் ராஜா

ஏதோ ஒன்று என்னை தாக்க 
யாரோ போல உன்னை பார்க்க 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க 
பெண்ணே நானும் யெப்படி நடிக்க 
காலம் முழுதும் வாழும் கனவை 
கண்ணில் வைத்து தூங்கினேன்..
காலை விடிந்து போகும் நிலவை 
கையில் பிடிக்க யேங்கினேன்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை 
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே 

என்னை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்  
யேதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது 
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் 
இரவையும் பகலையும் மாற்றி போனாய்
யேன் இந்த பிரிவை தந்தாய் என் இதயத்தில் 
தனிமையை ஊற்றி போனாய் 
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ...

பெண்ணே உந்தன் ஞாபகத்தை 
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே 

ஏதோ ஒன்று என்னை தாக்க 
யாரோ போல உன்னை பார்க்க 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க 
பெண்ணே நானும் யெப்படி நடிக்க 
காலம் முழுதும் வாழும் கனவை 
கண்ணில் வைத்து தூங்கினேன்..
காலை விடிந்து போகும் நிலவை 
கையில் பிடிக்க யேங்கினேன்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை 
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே 

1 comment: